குச்சவெளியில் வலையில் சிக்கிய சுறா

திருகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் வலையில் சிக்கிய சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டனர்.

இச்சம்பவம் நேற்று (14) இடம்பெற்​றது. வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லறாவ மீன் பிடிகிராம மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு சென்ற வேளையில் மீன் வலையில் சிக்குண்ட நிலையில் பாரிய சுறாவொன்று காணப்பட்டுள்ளது. அதனை மீட்ட மீனவர்கள் சுறா மீனை பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Tue, 06/15/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை