பலாலி சர்வதேச விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி

இந்தியாவிடமிருந்து 300 மில். ரூபா பெற தீர்மானம்

யாழ். பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென்றும் கூறினார்.

 

Wed, 06/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை