புண்ணிய நிகழ்வுகள் ஏற்பாடு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடத்தப்படும் லேக் ஹவுஸ் மிகிந்தலை (ஆலோக்க பூஜா) ஓளியூட்டும் பூஜையுடன் இணைந்ததாக பல புண்ணிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்பூஜை லேக் ஹவுஸ் நிறுவனத்தால் தொடர்ந்து நடத்தப்படும் 59 வது வருட பூஜையாகும். இப்பூஜை, நிறுவனத்தால்அமைக்கப்பட்டுள்ள விகாரையின் அறங்காவலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர் சபையின் மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, பௌத்த நடவடிக்கைகள் ஆணையாளர், லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.
இலங்கை மின்சார சபையுடன் இணைந்து நடத்தப்படும் 59ஆவது வருட ஆலோக்க பூஜா 2021 ஜூன் மாதம் 23ஆம் தேதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
சம்பிரதாயபூர்வமாக இவ்வருடமும் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இவ்வருடம் ஜூன் 23ஆம் திகதி(பௌர்ணமிக்கு முதல் நாள்) பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், ஜூன் 24ஆம் திகதி( பௌர்ணமி அன்று) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆலோக்க பூஜா மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.
from tkn