எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் ஹெலி மூலம் கண்காணிப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து தீ பிடித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான எக்ஸ் - பிரஸ் பேர்ள் என்ற சரக்குக் கப்பல் தற்போதைய நிலைமையை நேற்றைய தினம் இலங்கை விமானப் படையினர் ஹெலிகொப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் இந்த கண்காணிப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக விமானப் படையின் ஊடகப் பணிப்பாளரும் பேச்சாளருமான குரூப் கெப்டன் துஷான் விஸேசிங்ஹ தெரிவித்தார். மேற்படி கப்பலில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதன் தற்போதைய நிலைமை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியபடுத்தும் பொருட்டு ஹெலிகொப்டர் மூலம் வானிலிருந்தவாரே கண்காணிக்கப்பட்ட அதேசமயம்,  புகைப்படங்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி கப்பலில் ஆங்காங்கே புகை காணப்பட்ட போதிலும் கப்பலின் ஏனைய பகுதியை குளிர்மை படுத்தும் வகையில் நேற்றைய தினமும் மும்முனைகளில் நீர் பாச்சுவதை காணக்கூடியதாக இருந்தது.

ஸாதிக் ஷிஹான்

Mon, 05/31/2021 - 00:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை