விமான சேவைகள் ஆரம்பம் தொடர்பில் முடிவு எதுவுமில்லை

பின்னரே அறிவிப்பு என்கிறார் பிரசன்ன

 

பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலத்தில் விமான சேவைகள் மற்றும் விமான நிலைய செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தையைடுத்ததே மீண்டும் அந்த சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரசாங்கம் ஏற்கெனவே எதிர்வரும் 31ஆம் திகதி வரை விமான சேவைகள் மற்றும் விமான நிலை நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்துள்ள நிலையில் அதற்குப் பின்னரும் அந்த தடை நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையிலேயே அரசாங்கம் மேற்படி தீர்மானங்களை எடுத்துள்ளது என்றும் அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை