சட்ட மாஅதிபர் IGPக்கு தகவல்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைப்பதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கிணங்க சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் சிறைக் கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.
நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கவே மேற்படி வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். அதற்கிணங்க சில குற்றங்களுக்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளை பிணையில் விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn