சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை

அதிகாரிகள் நேற்று புதன்கிழமை விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வருவதையடுத்து அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் தலைமையில் வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை வங்கி அலுவலகம், மற்றும் வர்த்தக நிலையங்கள், உணவகங்களில் நேற்றுக் காலை விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பேணாமை மற்றும் முகக்கவசங்கள் அணியாதவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர். வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா இலங்கை வங்கியின் நகரக்கிளை மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதார 

வவுனியா விசேட நிருபர்

Thu, 05/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை