மாகாண சபைத் தேர்தலில் சு.க தனித்தே போட்டியிடும் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் தெரிவிப்பு

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தனிக் கட்சியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீ.ல.சு.க.வை வலுப்படுத்த கிராம மட்டத்தில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

"ஒரு கட்சியாக எங்களுக்கு முக்கிய தேவை அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். மாகாண சபைத் தேர்தல் வரும்போது, ​​நாங்கள் ஒரு கட்சியாக போட்டியிட தயாராக இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை உருவாக்கப் போவதாக கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் கூறியிருந்தார்.கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அண்மையில் ஆளும் தரப்பிலுள்ள சிறுகட்சிகள் சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் கூடி மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Tue, 04/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை