சவூதி - ஈரான் பேச்சுவார்த்தை

சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இரு நாட்டு மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக அது தொடர்பான அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டு நான்கு ஆண்டுகள் எட்டி இருக்கும் நிலையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி பக்தாதில் முதல் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதில் யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மூலம் சவூதி மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

எனினும் வெளியாகி இருக்கும் இந்த செய்தி பற்றி இரு தரப்பும் உத்தியோகபூர் அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை.

Mon, 04/19/2021 - 16:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை