மகாநாயக்க தேரருக்கு பூரண அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நாளை

அமரத்துவமடைந்துள்ள இலங்கை அமரபுர பௌத்தமத பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மவாச தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை 25 ஆம் திகதி பூரண அரச மரியாதையுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளன.

மகாநாயக்க தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நேற்றைய தினமும் அரசியல் தலைவர்கள் மற்றும் பெருமளவிலான மக்களும் திரண்டிருந்தனர். மகாநாயக்க தேரர் தனது 88வது வயதில் நேற்று முன்தினம் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

 

 

Wed, 03/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை