- கவனயீனத்தால் ஒரு வயது குழந்தை சாவு
கல்கிரியாகம - ஆடியாகல பிரதேசத்தில் வீடொன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்குள் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நேற்று முன்தினம் (15) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் அனைவரும் இருந்துள்ளதுடன், வீட்டாரின் கவனயீனத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Wed, 03/17/2021 - 11:28
from tkn