கிளிநொச்சி வட்டக்கச்சியில் வீட்டுக்கு தீ!

- பழைய பகையால் நேர்ந்த சம்பவம்

கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் 10.03.2021இடம்பெற்ற  கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியான அருளம்பலம் துஷ்யந்தன் மீது  கத்தியால் குத்திய நபரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதோடு, இறந்தவரின்  மனைவி மற்றும் சகோதரிகள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

இச் சம்பவம் நேற்று காலை பத்து மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்த  நிலையில் சந்தேக நபர்களின் வீட்டில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு  உறவினர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் சென்ற நிலையில் இறந்தவரின் மனைவி  மற்றும் சகோதரிகள் உட்பட கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து இறந்தவருக்கு  நீதி கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை  என்று தெரிவித்து பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுப்பட்டனர். இதன் போதே  பொலிஸார் அவர்கள் மீது தாக்குதலை மேற் கொண்டுள்ளனர். 

இச் சந்தர்ப்பத்தில் கத்தி குத்து மேற்கொண்டவரின் வீட்டின் மீது தீ  வைக்கப்பட்டுள்ளது. தீயினை பொலிஸார் கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவந்துள்ளனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Tue, 03/16/2021 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை