யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் ஆட்களற்ற இயந்திர ரோலர் படகு

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் சனிக்கிழமை இரவு கரையொதுங்கிய ஆட்களற்ற இயந்திர ரோலர் படகு தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...  

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இலக்கம்,பெயர் பொறிக்கப்பட்ட ரோலர் படகு கரை ஒதுங்கியுள்ளது.இந்த படகினை சோதனையிட்ட போது படகில் யாரும் இல்லாத நிலையில் படகு கரை ஒதுங்கியதை உறுதி செய்தனர்.

இந்நிலையில் குறித்த படகில் வந்தவர்கள் யார்? அவர்களுக்கு என்ன நடந்தது எனக் கடற்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோப்பாய் குறூப் நிருபர் 

   

Tue, 03/16/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை