பாடசாலை சேவை வேனிலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி

வெள்ளவாயாப் பகுதியில் பாடசாலை சேவை வான் ஒன்றிலிருந்து தவறி விழுந்து மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வெள்ளவாயாப் பகுதியின் ஹுனுகெட்டிய என்ற இடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரஹாரா பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ. எம். பபசர ஹிம்மான சந்திமால் அனுசய என்ற ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

மாணவன் சென்ற வானின் கதவு திடீரென திறந்தமையால் அவன் வெளியில் வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

காலையில் பாலர் பாடசாலைக்கு சென்ற மாணவன் பகல் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வானின் கதவு திடீரென திறந்ததினால், மாணவன் பாதையில் வீசப்பட்டுள்ளான்.

பாதையில் விழுந்த மாணவனை, வெள்ளவாயா அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவன் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவாயாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வானின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாரதியின் பொறுப்பற்ற செயற்பாடே இவ்விபத்துக்கான காரணமென தெரியவந்துள்ளது.

சாரதியை, வெள்ளவாயா மஜிஸ்ரேட் பதில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதுடன், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பதுளை தினகரன் விசேட நிருபர், லுணுகல நிருபர்

Sat, 03/27/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை