இந்தியாவிலிருந்து மேலுமொரு தொகுதி தடுப்பூசி வருகிறது

- இரு வாரங்களில் கிடைக்குமென்கிறார் சன்ன

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் அதிகளவில் தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்படுகின்ற ஏனைய பகுதிகளிலும் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tue, 03/23/2021 - 12:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை