இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கைதான 54 தமிழக மீனவர்களுள்

40 பேர் படகுகளுடன் விடுவிப்பு

 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 54 தமிழக மீனவர்களில் 40 பேர் நேற்று 03 வள்ளங்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.  யாழ்ப்பாணம் கோவளம் பகுதியில் கைதான மீனவர்கள் 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதும் அவர்கள் நேற்று விடுவிக்கப்படவில்லை. நேற்று விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டிச் செல்லும் வரை இலங்கை கடற்படை நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது.

யாழ்.கோவளம்,பேசாலை, முல்லைத்தீவு,இரணைதீவு போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இந்த மீனவர்கள் 05 படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். வடக்கு கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு மறுநாளே விடுவிக்கப்பட்ட சம்பவம் வடமாகாண மீனவர் அமைப்புக்களை வெகுவாக பாதித்துள்ளது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்துக்குள்ளேயே விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அவர்கள் தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 03/27/2021 - 07:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை