அரசுக்கு 40 மில்.ரூபா நஷ்டம் சதொச வழக்கிலிருந்து

ஜோன்ஸ்டன் விடுதலை

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்து பிரதிவாதிகள் மூவரையும் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்ய  கொழும்பு பிரதம நீதிவான் நேற்று உத்தரவிட்டார். ச.தொ.ச ஊழியர்களை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தியதன் ஊடாக அரசுக்கு 40 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ச.தொ.சவின் முன்னாள் தலைவர் இராஜ் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சர்கர் ஆகியோருக்கெதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

Sat, 03/27/2021 - 07:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை