நாட்டை முடக்குவதற்கான எந்தவித திட்டமும் இல்லை

கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி, தொழில் இல்லாமல் போனதே உண்மை

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா தாக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கானவர்கள் தொழில் இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை போன்று பாரியளவில் கடன் சுமையால் நசுக்கப்பட்டுள்ள நாட்டை, முழுமையாக முடக்குவதாக இருந்தால், அதற்கான பொருளாதார பலம் எம்மிடம் இல்லை.

முடக்குவதற்கான தேவை இருக்கின்ற போதிலும் அதனை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றதாக அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டை முடக்காமல், திறந்து வைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கவே முயற்சிப்பதாகவும் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டிய சவாலே தற்போது உள்ளதாகவும் ஆகையால் இயலுமானவரை நாட்டை திறந்து வைத்து, நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி உள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 02/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை