வாகன இறக்குமதித்துறையை பராமரிக்க திட்டம் தயாரிப்பு ஜனாதிபதியை சந்திக்கவும் ஏற்பாடு

நாட்டின் அந்நிய செலாவணி,வெளிச்செல்லும் அளவை குறைப்பதன் மூலம் வாகன இறக்குமதித் துறையை பாராமரிப்பதற்கு திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் அரோஷ் ரொட்ரிகோ நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை முற்றிலும் இடைநிறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இதன் விளைவாக இந்த துறையில் பணிபுரியும் ஒரு இலட்சம் பேர் நேரடியாக வேலையிழக்க நேரிடுவதோடு அவர்களை சார்ந்து வாழும் 04 இலட்சம் பேர் பாதிப்பக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை