சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டிலிருந்த சிவாஜிலிங்கத்திற்கு திடிரென ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தம் காரணமாக மயக்கமுற்ற நிலையில் அவசர அம்புலன்ஸ் வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனையடுத்து வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரவெட்டி தினகரன் நிருபர்

 

Wed, 02/24/2021 - 12:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை