இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான இரு தரப்பு பேச்சுவார்த்தை, ஜனாதிபதி அலுவலகத்தில் தற்போது இடம்பெறுகிறது.
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று (23) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பிரதமரின் நிகழ்ச்சிகள்
நேற்று (23)
- பி.ப. 4.15: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் வரவேற்பு
- பி.ப. 6.00: அலரி மாளிகையில் கலந்துரையாடல்
- பி.ப. 6.30: மணிக்கு கூட்டு ஊடக வெளியீடு
இன்று (24)
- மு.ப. 10.30: ஜனாதிபதியுடன் சந்திப்பு
- மு.ப. 11.30: வர்த்தக, முதலீட்டு மாநாடு - ஷங்ரி லா
- பி.ப. 12.30: சபாநாயகர், விளையாட்டு அமைச்சர் பகல் போசணம்
- பி.ப. 12.30: நாவல கிரிமண்டல வீதியில் உயர்தர விளையாட்டு நிலையம் நிர்மாணம் தொடர்பில் பேச்சுவார்த்தை - ஷங்ரி லா
- பி.ப. 3.00: விமான நிலையத்தில் விடைபெறுவார்
from tkn