எம்.பிகளுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து எக்ஸ்ரா செனெகா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று முதல் நான்கு தினங்கள் 225 எம்.பிகளுக்கும் இந்த தடுப்பூசி வழங்க இருப்பதாக படைக்கள சேவிதர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தினால் ஒரு தொகை கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு வழங்கப்பட்டதோடு சுகாதார தரப்பு, பாதுகாப்பு தரப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தேவையுள்ளவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலே எம்.பிகளுக்கு இன்று தடுப்பூசி வழங்கப்படுகிறது.

Tue, 02/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை