தனியார் பஸ் பணிப் பகிஷ்கரிப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு

தனியார் பஸ் பணிப் பகிஷ்கரிப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு-Private Bus Strike Postponed to Next Week

இன்று (08) இரவு முதல் திட்டமிடப்பட்டிருந்த தனியார் பஸ் பணி நிறுத்தத்தை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இராஜாங்க நிதியமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த முடிவை எட்டியுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

குறித்த தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக பஸ் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கும் இடையே இன்று (08) காலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

பஸ்களுக்கான லீசிங் வட்டியை குறைப்பது தொடர்பு உள்ளிட்ட ஒரு சில பிரச்சினைகளை முன்வைத்து, போக்குவரத்திலிருந்து விலகப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, குறித்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பஸ் பணி நிறுத்தத்தை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரையான ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க பஸ் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

Mon, 02/08/2021 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை