சாவகச்சேரி-நுணாவில் பகுதியில் கோர விபத்து; நால்வர் படுகாயம்

சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் பொலிஸ் நிலையத்தை அண்மித்து ஏ9 வீதியில் நேற்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து சாவகச்சேரி ஊடாக யாழ். நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்த ஹயஸ் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்துச் சம்பவித்துள்ளது. ஹயஸ் வாகனம் வேறு ஓர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது இவ் விபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது ஹயஸ் வாகனத்தின் முன்பகுதி முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த கெற்பேலி மேற்கைச் சேர்ந்த 25 வயதான ஐங்கரன்,மீசாலை கிழக்கைச் சேர்ந்த 21வயதான சாரூகன்,அல்லாரை வடக்கைச் சேர்ந்த 17 வயதான ஆரூகாஸ் மற்றும் மீசாலை வடக்கைச் சேர்ந்த 20 வயதான ரகுராம் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மேலதிக சிகிட்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சாவகச்சேரி விசேட நிருபர்

Mon, 01/04/2021 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை