தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் விடயங்களா?

1997 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள கோரிக்கை

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஏதேனும் விடயம் தொடர்பில் தகவல் இருந்தால் சிறப்பு பொலிஸ் அவசர இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக் கும்பல்கள் அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் இந்த சிறப்பு நடவடிக்கை மையம் நிறுவப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது போன்ற தகவல்களை வழங்க பொதுமக்கள் 1997 என்ற அவசர இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். பொது மக்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக சிறப்பு நடவடிக்கை மையத்தில் பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

Fri, 01/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை