கிழக்கு முனைய விவகாரம்; ஜனாதிபதியுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து, இன்றும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று தெரிவித்தார். கண்டியில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவோ அல்லது குத்தகைக்கு வழங்கப்படவோ மாட்டாதென ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதனை வர்த்தக திட்டமாக அவர் முன்மொழிந்துள்ளார்.இந்த நிலையில், இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Fri, 01/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை