காசாவில் 2ஆவது இரவாக இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

இஸ்ரேலிய பீரங்கிகள் இரண்டாவது நாள் இரவாகவும் குடியிருப்பு இல்லம் ஒன்று உட்பட காசா பகுதியில் பல தளங்கள் மீதும் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் எற்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன தரப்பினர், மகாசி அகதி முகாமில் இருக்கும் வீடு ஒன்று சேதமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீன பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டு ஒன்று வீசப்பட்டதை அடுத்தே ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசா பகுதி 2007 தொடக்கம் இஸ்ரேல் மற்றும் எகிப்து முற்றுகையில் உள்ளது. இங்கு இஸ்ரேல் நடத்திய மூன்று போர் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/21/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை