அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மருத்துவக் கண்காணிப்புக்காக உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் அமைச்சு மூடப்படவில்லையென்றும்அதன் நடவடிக்கைகள் இயல்பாக முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்
காணப்பட்டுள்ளவர்களுக்கு நெருக்கமாகச் செயற்பட்டவர்களையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நோயாளர்களுக்கு மருத்துவ கண்காணிப்பு செற்பாடுகள் முன்னெடுக்கபபட்டுள்ள நிலையில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn