தவறி விழுந்த இளைஞன் மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற இளைஞன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் மாயமாகியுள்ள நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது. இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர். இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக தி.தனுசன் எனும் பதினெட்டு வயது மதிக்க தக்க இளைஞர் தனது நண்பர்களுடன் நேற்றுமுன்தினம் மதியம் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது நீர் வழிந்தோடும் சுருங்கை பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் மற்றும் கிராம மக்களால் இளைஞரை தேடும் பணி இரவிரவாக முன்னெடுக்கப்பட்டிருந்தும் தேடுதல் பணி தோல்வியுற்றிருந்த நிலையில் காணாமல் போன இளைஞனை நேற்றைய தினமும் எட்டு மணி தொடக்கம் கடற்படையினர், பொலிஸார், இராணுவம், மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்துதேடும் பணியில் ஈடுபட்டிருந்தும் குறித்த காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்கவில்லை, எனவே நேற்றும் மூன்றாம் நாள் குறித்த இளைஞனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது காலை 11 மணியளவில் குறித்த நீர்த்தேக்கத்திற்கு 50 மீற்றர் தொலைவில் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது..

ஓமந்தை விஷேட நிருபர்

Mon, 12/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை