21ஆவது கொரோனா மரணம் பதிவு; நேற்று மரணமான 40 வயது ஆண்

21ஆவது கொரோனா மரணம் பதிவு; நேற்று மரணமான 40 வயது ஆண்-21st COVID19 Death Reported-40-Yr Old From Mahara Died Yesterday

இலங்கையில் கொரோனா தொற்றிய 21ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று (31) வெலிசறை, மார்பு நோய் சிகிச்சைப் பிரிவில் வைத்து மரணமடைந்த நபருக்கு மேற்கொண்ட PCR சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மஹர பிரதேசத்தைச் சேர்ந்த, 40 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர், அதியுயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாசத் தொகுதியில் தொற்று நிலை பிரச்சினை காரணமாக, கடந்த 23ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது PCR பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நேற்று (31) மரணமடைந்த அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரதேப் பரிசோதனையில் மேற்கொண்ட இரண்டாவது PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றாளர் என கண்டறியப்பட்டதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தற்போது அறிவித்துள்ளது.

Sun, 11/01/2020 - 21:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை