தனிமைப்படுத்தப்பட்ட 718 பேர் இன்று வீடுகளுக்கு

தனிமைப்படுத்தப்பட்ட 718 பேர் இன்று வீடுகளுக்கு-718 Quarantined Persons Set to Leave for Homes NOCPCO

- நேற்று 10,510 PCR பரிசோதனைகள்

முப்படையினரால்‌ நிர்வகிக்கப்படும்‌ தனிமைப்படுத்தல்‌ நிலையங்களில்‌ இருந்து இன்று (01) 718 பேர்‌ வீடு திரும்பவுள்ளதாக‌, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பின்வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 718 பேரும் இன்று வீடு திரும்புகின்றனர்.

  • மீரிகமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 03 பேர்
  • நில்வளா ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 310 பேர்
  • பிரண்டிக்ஸ் புனானை 128 பேர்
  • மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 93 பேர்
  • குண்டசாலை 43 பேர்
  • விடத்தல்பளை 141 பேர்

அந்த வகையில், முப்படையினரால் நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்று (01) வரை 60,890 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 60 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,990 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், நேற்றையதினம் (30) மாத்திரம் 10,510 PPR சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, இதுவரை இலங்கையில் 512,735 PCR சோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் (30) குணமடைந்த மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிய 117 பேரில் 2 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதோடு, ஏனைய 115 பேரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 11/01/2020 - 21:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை