பத்திரிகைகளை ஏற்றிய லொறி 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

- சாரதி படுகாயம்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பத்திரிகைகளை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த சிறிய லொறியொன்று பாதையை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில், குறித்த லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இன்று (06) அதிகாலை 4.00 மணியளவில் பெரகலைப் பகுதியில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதி, தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த லொறியானது, பதுளையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது,  பெரகலைப் பகுதியிலுள்ள மலைப்பகுதியிலிருந்து கல்லொன்று லொறி மீது  வீழ்ந்ததில், லொறி தள்ளப்பட்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

பெரகலைக்கும், ஹல்துமுல்லைக்கும் இடையில் சுமார் 200 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் ஹல்துமுல்லை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(பதுளை தினகரன் விசேட நிருபர் - எம். செல்வராஜா)  

Fri, 11/06/2020 - 14:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை