றோலர் இயந்திரத்திற்குள் அகப்பட்டு தொழிலாளி பலி

யாழ். புலோலி, கொடிகாமம் வீதி புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் வீதி செப்பனிடும் இயந்திரத்துக்குள் (Road Roller) அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம்  நேற்று (05) முள்ளிப்பகுதியில் இடம்பெற்றுள்ளதோடு, சம்பவத்தில் பலாங்கொடையைச் சேர்ந்த பிரேமரத்ன (62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முள்ளிப்பகுதியில் வீதி அகலமாக்கும் பணி இடம்பெற்றிருந்த வேளையில், குறித்த நபர் வீதி செப்பனிடும் இயந்திரத்திற்குள் (Road Roller) தவறி வீழ்ந்து அதற்குள்
அகப்பட்டுள்ளார்.

உடனடியாக  அவரை மீட்டு பருத்தித்துறை  அரசினர்
ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

(கரவெட்டி தினகரன் நிருபர் - சின்னத்துரை தில்லை, யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

Fri, 11/06/2020 - 13:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை