ஈராக் இராணுவம் மீது தாக்குதல்: 11 பேர் பலி

மேற்கு பக்தாதில் ஈராக் இராணுவ சோதனைச் சாவடி ஒன்றின் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் படையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டு எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகரின் தென்மேற்கு பிரதேசமான அல் ரத்வானியாவில் நான்கு வாகனங்களில் வந்த தாக்குதல்தாரிகள் கைக்குண்டுகள் மற்றும் தானியக்கத் துப்பாக்கிகள் கொண்டு நேற்று இந்தத் தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசுக்கு ஆதரவான சுன்னி போராளிகளின் தளம் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஈராக் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தாக்குதல்தாரிகளைத் தேடி தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

 

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை