வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ட்ரம்ப்

கொரோனா காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 3 நாட்கள் சிகிச்சையின் பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி, தற்போது வெள்ளை மாளிகையை சென்றடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரது உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (74) மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் கடந்த 2ஆம் திகதி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியமைஉறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திய நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்தஜ னாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இலேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது.

காய்ச்சல் தொடர்ந்து நீடித்ததையடுத்து, கடந்த 3ஆம் திகதி அவர் மேலதிக சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட்  இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை சீரடைந்தது. 

இந்நிலையில், 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வால்டர் ரேட் இராணுவ வைத்தியசாலையிலிருந்து அவர் இன்று வெளியேறியுள்ளார்.

அவர் வெள்ளை மாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனி ஹெலிகொப்டர் மூலம் வெள்ளை மாளிகையை சென்றடைந்ததாகவும், சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

Tue, 10/06/2020 - 10:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை