வெளிநாடுகளிலிருந்து 302 பேர் வருகை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 302 பேர் இன்று (06) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

துருக்கியின் இஸ்தான்புல்லிருந்து 260 பேரும், கட்டாரிலிருந்து 42 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tue, 10/06/2020 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை