'ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களம் இறங்குவதை விரும்புகிறேன்'

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ். இவர் எப்போதுமே மத்திய வரிசையில்தான் களம் இறங்கி துடுப்பெடுத்தாடுவார் . ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். சில போட்டிகளில் சொதப்பியதால் விமர்சனத்திற்கு உள்ளானார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இவரது சதத்தால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இன்னும் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் எப்போதுமே தொடக்க வீரராக களம் இறங்க விரும்புவேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘இந்த புதிய ரோலை (ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக) மகிழ்ச்சியாக செய்கிறேன். இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், டாம் பாண்டன், பேர்ஸ்டோவ், அலேக்ஸ் ஹேல்ஸ் இருப்பதால் தொடக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்குவது கடினம். இதனால் கிடைக்கும் வாய்ப்பை மகிழ்ச்சி யுடன் அனுபவிக்கிறேன். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் எனக்கு பாரிய பொறுப்ப கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை