சிரிய கிளர்ச்சியாளர் பகுதியில் குண்டு வெடிப்பு: 19 பேர் பலி

துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கு சிரிய நகர் ஒன்றில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் குறைந்த 19 பேர் பலியாகியுள்ளனர்.

அல் பாப் நகரின் பஸ் தரிப்பிடம் ஒன்றுக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டட இடிபாடுகளில் உயிர் தப்பியோரை தேடி தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மீட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருப்பது என்பது பற்றி தெரியவில்லை. எனினும் 2017 ஆம் ஆண்டு இஸ்லாமிய அரசு குழுவிடம் இருந்து அல் பாப் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியது தொடக்கம் அங்கு பல தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதல் ஒன்றில் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு சிரிய குர்திஷ் படையினர் மீது துருக்கி குற்றம்சாட்டியது.

Thu, 10/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை