பொய்யான செய்திகளை வெளியிட்டால் சட்ட நடவடிக்ைக

இயற்கை சுற்றுச்சூழல் அழிப்பு;

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவிப்பு

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர், முன்னர் இல்லாத அளவில் சுற்றாடல் அழிக்கப்படுவதாக குறிப்பிடும் பொய்யான செய்திகளை பரப்புவதற்கு முயற்சிகள் எடுப்பது இனங்காணப்பட்டுள்ளது.

காடுக​ளை தீயிட்டு அழிப்பதாகவும் இயற்கையாக காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதாகவும் இந்த பொய்யான செய்திகளினால் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு முன்னர் எக்காலத்திலும் இவ்வாறான சுற்றாடல் அழிவுகள் நடைபெறவில்லையென்றும் அரசாங்கம் அவ்வாறன சட்ட விரோத செயல்களில் முன்னர் மௌனம் காப்பதாகவும் குறிப்பிட்டு இவ்வாறான செய்திகளை உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கின்றனர். இவ்வாறான செய்திகளில் முழுமையாக பொய் மற்றும் திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அழிவுகள் தொடர்பாக கூறப்படுகின்ற பொய்யான செய்திகள் விசேடமாக சமூக ஊடகங்களில் மற்றும் ஒரு சில அச்சு ஊடகம், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளிலும் பிரசாரம் செய்யப்படுகின்றது. இவ்வாறாக வெளியிடப்படுகின்ற செய்திகள் பொய்யானவை என்பது தகுந்த ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்படும்போது அவை சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்படுகின்றது. பின்னர் மீண்டும் வேறொரு பொய்யான செய்தி பிரசுரிக்கப்படுகின்றது. எதிர்க் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். அவர்களின் கூட்டங்கள் ஊடக அறிக்கைகள் மற்றும் நேர்காணல்களின் போது பொய்யான செய்திகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட “எச்” வலயத்தின், அனுராதபுரம் இஹலதலாவ குளத்தை புனர்நிர்மாணம் செய்யும்போது பாரிய காடழிப்பு இடம்பெறுவதாக குற்றம் சுமத்தி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி தமது செய்தி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த தகவல்கள் பொய்யான செய்திகளை உருவாக்கி சமூகமயப்படுத்தும் முயற்சிக்கு ஒரு உதாரணமாகும்.

காடழிப்புக்கு மேலதிகமாக பாரிய ஊழல்கள் இடம்பெறுவதாகவும் அதில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செய்திகள் முழுமையாக பொய்யானவை

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை