952 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

எருக்கலம்பிட்டியில்

 

இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளை மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் (28) பொலிஸார் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம்பிட்டி பகுதியில் கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மஞ்சள் கட்டி மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி குமார பள்லேவல தலைமையிலான பொலிஸ் பிரிவினரே மேற்படி மஞ்சள் கட்டிகளை  கைப்பற்றியுள்ளனர். மேலும் மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையின் பின் சுங்கத் திணைக்களத்திடம் இவற்றை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

 

மன்னார் நிருபர்

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை