பங்களாதேஷில் வெள்ளம்: உயிரிழப்பு 251 ஆக உயர்வு

பங்களாதேஷில் வெள்ளப் பெருக்குக் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 251ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாகவே அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நீரில் மூழ்கி, பாம்பு கடித்து, மின்னல் தாக்கியே பலரும் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் பங்களாதேஷின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளத்தால் ஏற்பட்ட நீர் வற்றியுள்ளது என்று அந்நாட்டு நீர் முகாமைத்துவத் துறை தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் வரை பங்களாதேஷில் மழை காலமாகும். இதன் காரணமாக வருடந்தோறும் அங்குள்ள நூற்றுக்கணக்கான ஆறுகள் வெள்ளப் பெருக்கை சந்தித்து வருகின்றன.

பங்களாதேஷ் மட்டுமல்லாது பாகிஸ்தான், ஆப்கானிதான் போன்ற நாடுகளும் இவ்வாண்டில் பருவ மழை காரணமாக கடுமையான வெள்ளப் பெருக்கை சந்தித்துள்ளன. இதன் காரணமாக இரு நாடுகளிலும் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.

Wed, 09/02/2020 - 08:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை