சு. க. 69 ஆவது ஆண்டு நிறைவு மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை

ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய நிறைவு தின நிகழ்ச்சிகளில் மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மத நிகழ்ச்சியில் விசேட போதி பூஜா பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. இந்து மத நிகழ்வு யாழ்ப்பணத்தில் நல்லூர் கோவிலிலும் தெஹிளை விஷ்ணு கோயிலிலும் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய மத நிகழ்வு தெவட்டகஹா ஜும்ஆ மஸ்ஜித் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கும் கிறிஸ்தவ மத நிகழ்வு கொம்பெனித்தெரு புனித ரோசரி தேவாலயத்திலும் இடம் பெறுகிறது.

மத அனுஷ்டானங்களுக்கு புறம்பாக கட்சிக்காக பாரிய அளவில் உழைத்த காலம்சென்ற எஸ். டபிள்யூ. ஆர் டி. பணடாரநாயக்க மற்றும் சிறிமாவோ பணடாரநாயக்க ஆகியோருடன் டி. ஏ. ராஜபக்ஷ, அனுர பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன, டி. பி. தென்னகோன், பதுர்தீன் மொஹம்மட், எஸ். எம். மரிக்கார், அலவி மௌலானா, ஹலீம் இஷாக், ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, அல்பிரட் துரையப்பா மற்றும் கட்சிக்காக உழைத்த காலம் சென்ற தலைவர்கள் மற்றும் கட்சியினர் உறுப்பினர்களும் இன்றைய தினம் நினவு கூரப்படவுள்ளனர்.

Wed, 09/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை