20ஆவது திருத்தம்; ஆராய குழுவை நியமித்தது சு.க

உத்தேச அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து கட்சிக்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது. 10 பேர் கொண்ட மேற்படி விசேட  குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஸ்மந்த, சட்டத்தரணி சஞ்சய கமகே, கலாநிதி சமில லியனகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் பரிந்துரைகளை பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவிடம் இது தொடர்பிலான கருத்துக்களும் திட்டங்களும் சமர்ப்பிக்கப்படுமென்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், சுதந்திரக் கட்சி இந்த குழுவை நியமித்துள்ளது.

இதேவேளை, அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை