துபாயிலிருந்து 289 பேர், டோஹாவிலிருந்து 15 பேர் வருகை

ஐக்கிய அரபு இராச்சியத்திலும் கட்டாரிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் 299 பேர் இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.45 மணிக்கு, கட்டாரின் டோஹாவிலிருந்து, கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR 668 எனும் விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானப் பயணிகள் 15 பேரில் 10 பேர் இலங்கையராவர்.

ஏனைய 05 பேரும், இலங்கையில் பணி புரியும் இத்தாலி மற்றும் பிரான்ஸ் தூதரக அலுவலக அதிகாரிகளாவர்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான UL 226 எனும் விமானத்தில், இலங்கையர்கள் 289 பேர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் 06 பேர் சிறுவர்களாவர்.

இவ்வாறு வருகை தந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  

Thu, 08/13/2020 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை