பதவியேற்பு விழாவில் பிள்ளையான் கலந்து கொள்ளாதது ஏன்?

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு நீதித்துறையினரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்களே இதனை தெரிவித்துள்ளன. ஜனாதிபதியை சந்தித்து ஆவணங்களை பெறுவதற்கு அனுமதி கிடைத்ததும் அவர் அமைச்சுப் பதவியை ஏற்பாரென பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிள்ளையான் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் அது வெற்றியளிக்கவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். 

Thu, 08/13/2020 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை