கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
ஆயுதப்படைகளின் தலைவரும், தலைமைத் தளபதியுமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
2019 ஜனவரி 01 ஆம் திகதி வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், இலங்கை கடற்படையின் 23ஆவது தளபதியாக பொறுப்பேற்றார், அதனைத் தொடர்ந்து இன்றையதினம், (ஜூலை 14) ஜனாதிபதியினால் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படைக்கும், தாய்நாட்டிற்கும் உன்னத சேவையை வழங்கிய அட்மிரல் பியல் டி சில்வா, தனது இரண்டாவது இல்லமான இலங்கை கடற்படையில், தனது 36 ஆண்டுகால கடற்படை சேவையிலிருந்து நாளை (ஜூலை 15, 2020) ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn