கிழக்கு, ஊவாவில் மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் மழையோ அல்லது, இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியக்கூறு நிலவுகின்றது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Wed, 07/22/2020 - 08:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை