வடக்கில் தடைசெய்யப்பட்ட முறைகளில் கடற்றொழில் செய்யத் தடை

அமைச்சரவையில்  தீர்மானம்

வடபகுதி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை கையாண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடைசெய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ் விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையில் அமைச்சரவையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து இச் சட்டவிரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இன்று முதல் நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்பதாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளின் போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத உபகரணங்களை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதை தடுத்தல், கடலட்டைத் தொழிலுக்கான அனுமதியை இரத்துச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு தமது தொழில்துறையை பாதுகாத்துத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்தே இப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்தார்.

இதையடுத்த கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக அத்தகைய சட்டவிரோத தொழில் முறைமைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்பரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை