அருட்தந்தை என்ரன் ரஞ்சித் அடிகளார் கொழும்பு உயர்மறை மாவட்டத்தின் துணை ஆயராக பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் திருத் தந்தையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயரான பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ மன்னார் மறை மாவட்ட ஆயராக பொறுப்பேற்றதையடுத்து அருட்தந்தை என்டன் ரஞ்சித் அடிகளார் கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் பல்வேறு மறை மாவட்டங்களிலும் அருட் பணியாளராக அளப்பரிய சேவை செய்துள்ள என்டன் ரஞ்சித் அடிகளார் கொழும்பு மருதானை புனித சூசையப்பர் கல்லூரியின் உதவி பிரதி ரெக்டராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.( ஸ)
Tue, 07/14/2020 - 09:27
from tkn