நல்லூர் கந்தன் உற்சவம் ஜூலை 25 கொடியேற்றம்

நேற்று கொடிச்சீலை வடிவமைப்பாளருக்கு காளாஞ்சி

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.  வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால்  நாட்டுதல் நிகழ்வு நடைபெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி மாட்டு வண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழ்.விசேட, பருத்தித்துறை விசேட நிருபர்கள்

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை